இவர்கள் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 4 பேருக்கும் முகம் வீங்கி, உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. பைசோவ் சக்கர நாற்காலியில் அமர வைத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முழுவதும் அவர் கண்களை திறக்காமல் சுயநினைவின்றி இருந்தார். அவரது காலில் பல வெட்டுகள் இருந்தன. இவர்கள் கைது செய்யப்பட்ட போது, கைதான ஒருநபரின் காதை ரஷ்ய ராணுவ வீரர்கள் அறுக்கும் வீடியோக்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து ஆதாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், குற்றவாளி ரசபலிஜோடாவின் காதில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. விசாரணைக்குப் பின் 4 பேரையும் வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மிர்ஜோயேவ், ரசபலிஜோடா ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
The post மாஸ்கோ தீவிரவாத தாக்குதல் கைதான 4 பேர் காயத்துடன் ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்: 2 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் appeared first on Dinakaran.