தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது: இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கடந்த 18ம் தேதி ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,080க்கு விற்பனையானது. 19ம் தேதி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,140க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.49,120க்கும் விற்கப்பட்டது. 20ம் தேதி கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,235க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. 21ம் தேதி தங்கம் விலை ரூ.280 குறைந்து ரூ.49,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 22ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் மார்க்கெட் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது. அதன்படி; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை 30 காசு உயர்ந்து ஒரு கிராம் 80.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.50ஆயிரத்தை நெருங்கியது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

The post தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது: இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: