இச்சமயங்களில் மலர் செடிகள் பனியில் பாதிக்காமல் இருக்க, பூங்கா முழுவதிலும் உள்ள பல லட்சம் மலர் செடிகள் மற்றும் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பது வழக்கம். இம்முறையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து மலர் செடிகளுக்கும் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் உறைபனியின் தாக்கம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் பனிப்பொழிவு இருக்காது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகள் மற்றும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மிலார் செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post ஊட்டியில் பனியின் தாக்கம் குறைந்தது கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றம் appeared first on Dinakaran.