இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்ததற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் இவ்வளவு மோசமான ஆளுநரால் இனி என்னென்ன எல்லாம் நடக்கும்? என கேள்வி எழுப்பினார். மேலும், போதைப்பொருள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்குதான் தொடர்பு உள்ளது; எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பதவிப் பிரமாணம் நடைபெறுவதில் தேர்தல் விதிமீறல் எதுவும் இல்லை; அரியானாவில் ஏற்கனவே 8 பேர் பதவியேற்றுள்ளனர். ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக குட்டு வைத்துள்ளது என்று அவர் கூறினார்.
The post ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக குட்டு வைத்துள்ளது.. இவ்வளவு மோசமான ஆளுநரால் இனி என்னென்ன எல்லாம் நடக்கும்?: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.