இந்த திட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின் பாஜக அரசின் திட்டம் குறித்து மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. அரசின் நிதியை பயன்படுத்தி பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் “விக்சித் பாரத்” தொடர்பான தகவலை நிறுத்துமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.விளம்பர நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துவதுடன் இது தொடர்பாக ஒன்றிய அரசு அறிக்கை அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும் : ஒன்றிய ஐடி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!! appeared first on Dinakaran.