இதே போல் பாஜக, பாமக அமைத்துள்ள கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் இட ஒதுக்கீடு என்றால் அறவே வேண்டாம் என்கிற கட்சியான பாஜகவுடன் இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ராமதாஸ் கூட்டணி அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். அதே போல் வழக்குகளை காட்டி பாஜகவால் அதிமுகவை அடிபணியவைக்க முடியாது என்றும் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
The post குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சாடல் appeared first on Dinakaran.