இந்நிலையில், நேற்று காலை 40க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு ஒரு நாயையும் காவலுக்கு வைத்துவிட்டு வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். நேற்று மாலை பட்டி அருகில் உள்ள பருத்திக் காட்டில் தீப்பிடித்து பரவியது. காற்றின் வேகத்தால் பட்டிக்கும் தீப்பிடித்து பரவி எரிந்தது. இதனால், பட்டியில் சிக்கிய ஆட்டுக்குட்டிகள் வெளியே வரமுடியாமல் அங்கும் இங்கும் கத்திக் கொண்டு ஓடின. நாயும் தீயில் சிக்கி ஓலமிட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால், பட்டியில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகள், நாய் ஆகியவை தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய மெம்மேலி ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40 ஆடுகள் பலி: பட்டியை மூடியதால் தப்பிக்க முடியாத பரிதாபம் appeared first on Dinakaran.