கோவை ரோடு ஷோவில் மாணவர்களை ஈடுபடுத்திய விவகாரம்.. பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை..!!

சென்னை: கோவையில் பாஜகவின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவையில் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஈடுபடுத்திய விவகாரத்தில் நரேந்திர மோடி மீதும், பாஜகவினர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திடுக!  இந்திய தேர்தல் ஆணையருக்கு – சிபிஐ (எம்) கடிதம்!!

கோவையில் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளிக் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்த பாஜகவினர் மற்றும் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (20.03.2024) இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post கோவை ரோடு ஷோவில் மாணவர்களை ஈடுபடுத்திய விவகாரம்.. பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: