இந்நிலையில் விவசாயத்திற்கு மகரந்த சேர்க்கையின் மூலம் நல்ல வருவாய் தருவது பற்றிய கருத்துக்களை விவசாயிகளுக்கு விளக்கி வருகிறார்கள் இந்நிலையில்மயிலாடும்பாறை, பொன்னன்படுக்கை, மலைராஜபுரம், ஒத்த தோட்டம், பசுமலைத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக இரவு பகலாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயப் பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தான் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும் விவசாயப் பயிர்களையும் தேன் பெட்டிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
The post கடமலை-மயிலை பகுதியில் தேன் பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள் appeared first on Dinakaran.