இவர்களது, மகள் பவானி (20) தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இதில், குமார் சொந்தமாக தொழில் செய்வதால், வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், பெற்றோர் வேலைக்குச் செல்வதால் தனிமையில் இருந்து வந்த பவானி மன அழுத்தத்துக்கு ஆளானார். இதனால், நேற்று அதிகாலை படுக்கை அறையில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பவானியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.