* கட்சியிலிருந்து விலகல்:
நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இறுதியான நிலையில் பாமகவில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜ – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நேற்று காலை கையெழுத்தானது. பாஜவுடன் கூட்டணி உறுதியான நிலையில் கட்சியில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.‘கண்டிப்பாக பாஜ கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டோம். இடஒதுக்கீடு துரோகிகளுக்கு என்றும் ஓட்டு இல்லை, வன்னியர் ஓட்டு பாஜவுக்கு இல்லை’ என விமர்சனம் செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சிலர் ‘பாமக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். யார் மீதும் எந்த கோபமும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு’ என்று பதிவு செய்து வருகின்றனர்.
The post வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜவுடன் பாமக கூட்டணி வைப்பதா?காடுவெட்டி குரு மகள் ஆவேசம் appeared first on Dinakaran.