திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம்: தமிமுன் அன்சாரி அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். சென்னையில் மனிதநேய ஜனநாய கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தோம்.

இந்தியாவின் ஜனநாயகம், பன்முக கலாசாரம், அரசியல் சட்டத்தின் மாண்புகள், சமூக நல்லிணக்கம் இவை எல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை மனித நேய ஜனநாயக கட்சி இதனை ஒரு அரசியல் களமாக பார்க்கவில்லை. மாறாக ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வோம்.

The post திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம்: தமிமுன் அன்சாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: