சிறிது நேரத்தில், குடோன் முழுவதும் தீ பரவி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆர்கே நகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடோனில் இருந்த மரங்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
The post கொருக்குப்பேட்டை மர குடோனில் தீவிபத்து appeared first on Dinakaran.