ஆந்திராவில் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்: சமூக வலைதளங்களில் வெளியிட்டார்


திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் ஸ்ரீதர். இவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தவர் பங்கர்ராஜூ. இவருக்கும் எம்எல்ஏவுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டது. இதனால் கார் டிரைவரை எம்எல்ஏ ஸ்ரீதர் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் வேறு எங்கும் பணி கிடைக்காத நிலையில் எம்எல்ஏ ஸ்ரீதர் குறித்து பங்கர்ராஜூ விமர்சித்து யூடியூப்புகளில் வெளியிட்டு வந்தார்.

ஸ்ரீதருக்கு அடுத்த முறை எம்எல்ஏ சீட் கிடைக்காது. மீறி கிடைத்தால் ஒரு பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்தார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீதருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பங்கர்ராஜூ, தான் விடுத்த சவாலில் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொண்டு நேற்று முன்தினம் புட்டபர்த்தியில் உள்ள ஒரு கோயில் முன் பாதி மொட்டையடித்து, பாதி மீசையை வழித்துள்ளார்.

The post ஆந்திராவில் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்: சமூக வலைதளங்களில் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: