பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளிட்ட நிழற்குடைகளில் இடம் பெற்றுள்ள அரசு சாதனை விளம்பரங்களையும் காகிதம் மற்றும் வெள்ளை பேனர்களை வைத்து மறைக்கும் பணி நடைபெற்றது. சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை, சுண்ணாம்பு மற்றும் பெயிண்ட் அடித்து மறைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. நேற்றிரவு அதிகாரிகள் வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகப்படும்படியான அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
The post தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலகங்களுக்கு சீல்.! சுவர் விளம்பரங்கள் அழிப்பு appeared first on Dinakaran.