இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்புமனு தாக்கலுக்கான பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர். பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை கூட்டத்தில் கூறியதாவது;
தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும், டிசம்பர் மாதத்துக்கு பின் 90,000 முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
The post மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு appeared first on Dinakaran.