பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி: வைகோ
மதிமுக சார்பில் துரை வைகோ எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம்; பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை; மக்களிடம் எளிதாக கொண்டு செல்வோம். பிரதமர் மோடி இன்னும் எத்தனை முறை வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்காது. மோடி சொல்லும் எனது குடும்பம் என்பது அவரது கட்சியில் சேரும் சமூக விரோதிகளையே குறிக்கும் என்று வைகோ கூறினார்.
The post பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.. பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்காது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.