டெல்லி: மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை ஒன்றிய அரசு கடந்த டிசம்பரில் இடை நீக்கம் செய்திருந்தது. இடைநீக்கத்தை அடுத்து இந்திய மல்யுத்த சங்க செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது.