இந்நிலையில் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆளுநர், அனைத்து மாநில பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தவும், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் தன்னார்வலர்களை இதற்கு பயன்படுத்தவும் வாக்களித்தவர்களுக்கு இணைய வழி சான்று கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும், இதை ஒரு இயக்கம் போல செயல்படுத்த துணை வேந்தர்கள் ஒப்புதல் அளித்தனர். 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்திய துறைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும். அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பாராட்டப்படுவார்கள்.
The post கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை எண் சேகரிப்புக்கு கடும் எதிர்ப்பு: ஆளுநர் மாளிகை புதிய விளக்கம் appeared first on Dinakaran.