பாஜ எம்பியை கண்டித்துஅரியலூரில் காங். எஸ்.சி. எஸ்டி பிரிவு ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், மார்ச் 15: அரியலூர் அண்ணாசிலை அருகே காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் பாஜக வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டேவைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றிப் பெற்றால் இந்திய அரசியல் சட்டத்தை மாற்றியமைப்போம் என்று கூறியதாக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டேவைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சங்கர்வேல், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், கட்சி மாவட்டச் செயலர்கள் கண்ணையன், ராஜீவ்காந்தி, கமலக்கண்ணன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் விஜய்ஆண்டனி, மாவட்டச் செயலர் தங்க செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

The post பாஜ எம்பியை கண்டித்துஅரியலூரில் காங். எஸ்.சி. எஸ்டி பிரிவு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: