சுகாதார ஆய்வாளரை தாக்கியவர் கைது

மதுரை, மார்ச் 14: மதுரை மாநகராட்சியின் 49 வது வார்டில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சுப்புராஜ் (44). இவர், நேற்று முன்தினம் முனிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் ஆய்விற்காக சென்றபோது, அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தன. அவர் அவற்றை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த முனிச்சாலை, ஓபுளாபடித்துறை பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் (36) என்பவர் சுப்புராஜை தடுத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து, விளக்குத்தூண் காவல் நிலையத்தில் சுப்புராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார், அப்துல் ரஹ்மானை கைது செய்தனர்.

The post சுகாதார ஆய்வாளரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: