சங்கரன்கோவிலில் லோக் அதாலத் 127 வழக்குகளுக்கு தீர்வு

சங்கரன்கோவில், மார்ச் 12: சங்கரன்கோவிலில் லோக் அதாலத் மூலம் 127 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்திலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 127 வழக்குகள் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றத்தில்) மூலம் தீர்வு காணப்பட்டது. சங்கரன்கோவில் தாலுகா வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான செல்வி அனுஷா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வழக்கு தொடுத்த இரு தரப்பினர்களும், வக்கீல்களும் சமரசம் செய்து கொண்டு வழக்குகளை முடித்து வைத்தனர். 127 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 350 வசூலிக்கப்பட்டது.

The post சங்கரன்கோவிலில் லோக் அதாலத் 127 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: