அப்போது போலீசார் சுட்டதில் பேச்சிதுரையின் முழங்காலில் குண்டு பாய்ந்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய சந்துரு, நெல்லை அருகே சீதபற்பநல்லூர் பாலம் அருகே போலீசுக்கு பயந்து குதித்தார். இதில் கை, கால்கள் உடைந்த நிலையில் சந்துருவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 2 பேரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில் தொடர் ரத்த இழப்பால் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் பேச்சிதுரை உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சேரன்மகாதேவி நீதித்துறை நடுவர் ராஜலிங்க ம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். சந்துரு மற்றும் இறந்த ரவுடி பேச்சிதுரை மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post தொழிலாளியை கொன்று ஓட்டம் போலீசாரால் சுட்டு பிடித்த ரவுடி சாவு appeared first on Dinakaran.