7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளன. மீதமுள்ள மாநிலங்களிடமிருந்து விளக்கங்களை பெற்ற பின்னர், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், 5 நிமிடம் தாமதமாக ஒளிபரப்பலாம். அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டு கூட ஒளிபரப்பலாம். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசு தரப்பு தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post மற்ற மாநிலங்கள் பின்பற்றும் நடைமுறைகளை கேட்டறிந்து சட்டப்பேரவையில் நேரடி ஒளிபரப்பு குறித்து கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.