இந்நிலையில் நேற்று பிற்பகல் சந்தியா உள்பட 3 குழந்தைகளும் சித்தி சண்முககனி என்பவருடன் அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். சண்முககனி துணிகளை துவைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் குழந்தைகள் மூவரும் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் குளத்து நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post குளத்தில் குளித்தபோது அக்கா, தங்கை, தம்பி பலி appeared first on Dinakaran.