மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். எந்தத் தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும், நானும் கையெழுத்து இட்டுள்ளோம். ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள்.ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மன நிறைவு தான் என்று வைகோ பேட்டி அளித்துள்ளார்.

 

The post மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: