மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டு விழா

 

திருப்பூர், மார்ச் 8: பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய கல்வி திருப்பூர் மாவட்டம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. நேற்று ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவானது தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் நடனம், பாட்டு, பலூன் உடைத்தல், மியூசிக்கல் சேர், மௌன மொழி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: