திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் களாம்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களம்பாக்கம் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாரதி, ஒன்றிய நிர்வாகிகள் தினகரன், ஜெகதீசன், ரமேஷ், சண்முகம், செந்தில்குமார், நீலாவதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு 300 பெண்களுக்கு சேலைகளையும், மாவட்ட விவசாய அணி சார்பில் மரக்கன்றுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் தலைமைப் பேச்சாளர் வாசு, கருணாநிதி, செயலாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் ராஜா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், அண்ணாதுரை, ஞானமூர்த்தி, முனிகிருஷ்ணன், செல்வம், தட்சணமூர்த்தி, அப்துல்ரஹீம், சின்னமண்டலி மூர்த்தி, சுரேஷ், வேலாயுதம், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரகாசம் செல்வம், ஊராட்சித் தலைவர் மாரியம்மாள் முரளி ஆகியோர் நன்றி கூறினர்.

The post திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: