பிரதமர் மோடி கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தர மாட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரும்.
பாஜவில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ரவுடிகள்தான். தமிழகம் மழை வெள்ளத்தில் தத்தளித்த போது கூட ஒன்றிய பாஜ அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை. திமுக ஆட்சியில் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். தமிழக அரசு செயல்படுத்தும் மக்கள் நல திட்டங்களை முடக்க பாஜ முயற்சி செய்யும். அதனால் மீண்டும் பாஜ வராமல் இருக்க வேண்டும். தமிழர்களுக்கு எதுவும் செய்ய கூடாது என்று பாஜ நினைக்கிறது. சமீபத்தில் வெளிவந்த தேர்தல் கருத்து கணிப்பு பொய்யானது, இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்’’ என்று தெரிவித்தார்.
The post இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பார்: நடிகர் போஸ் வெங்கட் பேச்சு appeared first on Dinakaran.