இவர், பள்ளிகொண்டா அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(24) என்பரை காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்து வெளியில் எங்கும் அழைத்து செல்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வழக்கம்போல் கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா வீட்டின் அறையில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கி கொண்டிருந்தார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பூவரசன் மற்றும் அவரது உறவினர்கள் ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த வந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்த பூவரசன் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். மனைவியின் தற்கொலையால் மனவேதனை அடைந்த பூவரசன் கழிவறைக்கு சென்று விஷம் குடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமணமான 3 மாதத்தில் சோகம்; காதல் மனைவி தற்கொலை கணவரும் விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.