தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கல்பாக்கத்தில் 500 மெ.வா திறனுள்ள ஈனுலைக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அணு மின் உற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதால் ஈனுலை திட்டத்தை கைவிட அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்குவது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: