புதுக்கோட்டை தீ விபத்து
புதுக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான ஷண்முகா நகரில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றில் வேகமாக பரவிய தீ பல ஆதி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு நிலவியது. நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தேனி
தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல அறிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து நாசமாகின. தேவனானம்பட்டி வனத்துறையினர் வனத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நீலகிரி, கூடலூரை அடுத்த மசினகுடி வனப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 4 இடங்களில் மரங்களில் பரண்களை அமைத்து கட்டு தீ ஏற்படாமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
The post தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உரக்கிடங்கில் தீ: ஆயிரம் டன் இயற்கை உரங்கள் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.