உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான குழுவில் தலைமைச் செயலாளர், தொழில் துறை செயலாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஜனவரி 07, 08ம் நாள்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: