கடையடைப்புக்கு ஆதரவு: விசைத்தறியாளர்கள் இன்று ஸ்டிரைக்

ஈரோடு: ஈரோட்டில் 50,000 விசைத்தறிகளை நிறுத்தி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஈரோடு, பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் இயங்கும் 50,000 விசைத்தறிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் ஜவுளி வணிகர்களின் கடையடைப்புக்கு விசைத்தறி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். ரூ.7 கோடி மதிப்பு துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கடையடைப்புக்கு ஆதரவு: விசைத்தறியாளர்கள் இன்று ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: