நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்க உரை ஆற்றுகிறார். சிந்தனைச்செல்வன் வாழ்த்துரை வழங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் வாழ்த்துகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ெதாண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
The post விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு எழுதிய மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி நூல்: திருமாவளவன் இன்று மாலை வெளியிடுகிறார் appeared first on Dinakaran.