எனவே அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணியை டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் எம்பி செல்வம் கலந்து கொண்டு மேம்பாலம் கட்டுவதற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார்.
இதில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் ஏழுமலை, கண்ணன், மதுராந்தகம் ஆர்டிஓ தியாகராஜன், ஒன்றிய செயலாளர் தம்பு, கவுன்சிலர் நாகப்பன், கூட்டமைப்பு தலைவர் நிர்மல்கவுன், ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சென்ற காஞ்சிபுரம் எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோருக்கு மேல்மருவத்தூர் ஊராட்சி மற்றும் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: பிரதமர் காணொலி மூலம் அடிக்கல், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.