மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து 72,790 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களோடு இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வீழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து 72,790 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எல்&டி பங்கு 2.36%, பவர்கிரிட் பங்கு 1.57%, இந்துஸ்தான் யுனிலீவர், எச்.டி.எஃப்.சி., நெஸ்லே பங்குகள் உயர்ந்து. என்.டி.பி.சி., டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ., எம்&எம், பஜாஜ் ஃபின்செர்வ், ரிலையன்ஸ், சன் பார்மா பங்குகள் குறைத்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90 புள்ளிகள் குறைந்து 22,122 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து 72,790 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: