அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்; எழும்பூரில் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது; அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து “தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்’’ வருகின்ற 1ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள “ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில்’’ (எழும்பூர் ரயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது.

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்; எழும்பூரில் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது; அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: