3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவருக்கு அடையாளத்தை காட்டிக் கொடுத்ததே காங்கிரஸ் கட்சி. இவரது எம்எல்ஏ பதவி கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் பறிக்கப்படும். விஜயதரணிக்கு தைரியம் இருந்தால் இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் பாஜ சார்பில் நிற்கட்டும். களத்தை சந்திப்போம். 12 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து இந்த தொகுதி பக்கம் வரவில்லை, மக்கள் பணி செய்யவில்லை என்ற புகார் எங்களுக்கு தெரியவந்தது. நான் மேல் இடத்திற்கு தகவல் கொடுத்துள்ளேன். கடந்த முறை இவர் பெண் என்பதால் சீட் கொடுக்கப்பட்டது. கட்சியில் இவருக்கு அகில இந்திய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post விஜயதரணி கெஞ்சி கூத்தாடி பாஜவில் சேர்ந்துவிட்டார்: விஜய் வசந்த் எம்.பி, ராஜ்குமார் எம்எல்ஏ தாக்கு appeared first on Dinakaran.