இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நிலம் கொடுத்த உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள வெவ்வேறு மண்டலங்களாக பிரித்து தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் படி இந்த அறிவிப்பானது சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி நேரடியாக விசாரணை நடைபெறும் என்று அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
The post பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான முதல் நிலை அறிவிப்பு வெளியீடு..!! appeared first on Dinakaran.