அது இயற்கை. அந்த காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வேலை செய்யும் பகுதியில் ஓய்வு எடுக்க வசதி செய்து தர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரியில் நாப்கின் மற்றும் அதை அகற்றும் இயந்திரம் வைப்பதை கட்டாயமாக்க வேண்டும்.’ என்றார்.கல்லூரி மாணவிகள் கூறுகையில், ‘பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறும் உயிரியியல் மாற்றத்தை பயன்படுத்தி அவர்களை ஒதுக்கக்கூடாது. சில வீடுகளில் மாதவிலக்கு காலங்களில் பூஜைக்கு வராதே, ஓரமாக இரு, கோயிலுக்குச் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். அது பெண்களுக்கு எதிரான தீண்டாமை. அதுகுறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.’ என்றனர்.
The post பெண் தீண்டாமைக்கு எதிராக விழிப்புணர்வு: மாணவிகள் 4500 பேர் உலக சாதனை முயற்சி appeared first on Dinakaran.