ஆனால், மாட்டிறைச்சி வைத்துக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறிய நடத்துநர் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யபட்டனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு ஆகியோர் மீது அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரில் ஓட்டுநர், நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.