அதனையடுத்து கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் எங்கு அமைக்கப்படும் என் கேட்டார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும். கோவையில் நூலகம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததைப் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கோவையில் நூலகம் கட்டி முடிக்கப்படும். திறக்கப்படும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு (வானதி ஸ்ரீனிவாசன்) முறையாக அழைப்பு வரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
The post கோவை நூலக அறிவிப்பு மதுரை எய்ம்ஸைப் போல் அல்ல.. 2026 ஜனவரியில் திறக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.