அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் நோட்டீஸ்

சென்னை : அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்தை கூறியதாக வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராஜுவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராஜுவின் கருத்துக்கு அடுத்த 24 மணி நேரத்தில் பொது வெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

The post அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: