மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ண தடைகோரி மனு

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியை மக்களவை தேர்தல் பணியின்போது வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்த தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் ராஜா முகமது என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்; வாக்குகளை கல்லூரியில் எண்ணுவதால் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. மனு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதில் தர வேண்டி உள்ளதால் வழக்கு விசாரணையை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ண தடைகோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: