பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஆணை

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பை விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் கூட்டுறவுத் துறை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஆணை appeared first on Dinakaran.

Related Stories: