சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் கெமிக்கல் கலந்திருப்பது உறுதி..!!

சென்னை: சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது.

The post சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் கெமிக்கல் கலந்திருப்பது உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: