அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த 4 ஆண்டு காலத்தில் ஏதாவது புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க அரசாணை வெளியிடபட்டதா?.
எடப்பாடி பழனிசாமி: 11-12-2017 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியானது. அப்போது நான்தான் முதல்வராக இருந்தேன். அதேபோல், 20-1-2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, அமைச்சர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அவை முன்னவர் துரைமுருகன்: அவர் கூறுவது சரி என்றால், அமைச்சர் பேசியதை சபாநாயகர் நீக்கி விடுவார்.
சபாநாயகர் அப்பாவு: நான் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்.
The post நான் முதல்வராக இருந்தபோது 42 ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: எடப்பாடி விளக்கம் appeared first on Dinakaran.