இவ்வழக்கு கடந்தாண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கோவை சிபிசிஐடி கூடுதல் எஸ்பி., முருகவேல் தலைமையில் 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. சசிகலா உட்பட 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவ்வழக்கில் 9வது நபராக குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளாவை சேர்ந்த மனோஜ் சாமியிடம் விசாரணை நடத்த இவரை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (15ம் தேதி) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ்சாமி இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை சிபிசிஐடி போலீசார் மனோஜ் சாமியிடம் விசாரணை appeared first on Dinakaran.