போரஸ் எல்லை வழியே பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய கூடும் என்றும் அதனால், எல்லை பகுதியில் வேலி அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன், இந்தியா மற்றும் மியான்மர் எல்லை முழுவதும் 1,643 கி.மீ. தொலைவுக்கு வேலி அமைப்பது என ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான சுதந்திர முறையில் இயக்கம் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவானது. இதன்படி, அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையை மத்திய வெளிவிவகார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், நம்முடைய எல்லைகளை பாதுகாப்பது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம். இதன்படி, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தொகை கட்டமைப்பை பராமரிப்பது ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.அரசின் இந்த முடிவுக்காக, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் இன்று தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். எனினும், பழங்குடியின உறவுகளை துண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என்று நாகா மற்றும் குகி அமைப்புகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
The post எல்லையில் புகுந்த மியான்மர் ராணுவம்.! இந்தியா-மியான்மர் எல்லை பகுதியை மூட முடிவு; ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் appeared first on Dinakaran.